செய்திகள்
பாராளுமன்ற கூட்டத் தொடர் குறித்து சோனியா காந்தி ஆலோசனை
தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் வரும் 29ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற வியூகக் குழு கூட்டம் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் குளிர்கால கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்ப ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஆதார விலைக்கு தனிச்சட்டம், கொரோனா இழப்பீடு உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.