செய்திகள்
பிரதமர் மோடியுடன் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு

பிரதமர் மோடியுடன் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி சந்திப்பு

Published On 2021-11-24 12:23 GMT   |   Update On 2021-11-24 12:23 GMT
எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை நீட்டிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
புதுடெல்லி:

மேற்கு வங்க முதல் மந்திரியும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.  திங்கள் கிழமை  முதல் டெல்லியில் தங்கியுள்ள மம்தா பானர்ஜி  பிரதமர் மோடியை இன்று மாலை சந்தித்தார். 

பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு  எல்லையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை நீட்டிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. 

அதேபோல், திரிபுராவில் மேற்கு வங்க மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் குறித்தும் பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி ஆலோசித்திருக்கலாம் என்று தெரிகிறது. டெல்லி சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மம்தா பானர்ஜி நாளை மேற்கு வங்காளம் திரும்புகிறார். 
Tags:    

Similar News