செய்திகள்
ராணுவ வீரர்

பணியில் மீண்டும் சேர வற்புறுத்தியதால் பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர்

Published On 2021-11-17 07:28 GMT   |   Update On 2021-11-17 07:28 GMT
சம்பந்தப்பட்ட துப்பாக்கி உரிமம் பெற்றது என்றும் அது அபிஷேக்கின் தந்தையுடையது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரேவா:

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அம்பிகா பாண்டே. இவரது மகன் அபிஷேக் பாண்டேவும் இந்திய ராணுவத்தில் படை வீரராக பணிபுரிந்து வந்தார். ஆனால், அபிஷேக் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ராணுவத்தைவிட்டு தப்பி உள்ளார்.

இதைக் கண்டித்த அபிஷேக்கின் பெற்றோர், ராணுவத்தில் மீண்டும் இணையுமாறு அவ்வப்போது வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், அபிஷேக் இது எனது தனிப்பட்ட விருப்பம் என்றும், என்னை வற்புறுத்த வேண்டாம் என்றும் கடுங்கோபத்துடன் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில், ரேவா மாவட்ட தலைநகரில் இருந்து 55 கி.மீ தொலைவில் உள்ள லார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிடாரியா என்கிற கிராமத்தில் நேற்று இரவு 7 மணியவில் அபிஷேக் தனது பெற்றோரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், காலில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தப்பியோடிய அபிஷேக்கை சுற்றிவளைத்த போலீசார் கைது செய்தனர். பின் துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.  சம்பந்தப்பட்ட துப்பாக்கி உரிமம் பெற்றது என்றும் அது அபிஷேக்கின் தந்தையுடையது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News