செய்திகள்
கோப்புப் படம்

ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Published On 2021-11-15 18:19 GMT   |   Update On 2021-11-15 18:19 GMT
ஜம்மு காஷ்மீரில் வெளிமாநிலத்தவர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளதால் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஹைதர்போரா பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தார். விசாரணையில் அவர் பர்சுலா பகுதியைச் சேர்ந்த வியாபாரி முகமது அல்தாப் பட் (44), என தெரிய வந்துள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News