செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,540 பேருக்கு கொரோனா

Published On 2021-11-10 15:20 GMT   |   Update On 2021-11-10 15:20 GMT
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 7,841 பேர் குணமடைந்துள்ளனர்.
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து அம்மாநில சுகாதாரத்துறை தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 7,540 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,841 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் உயிரிழந்ததுடன், விடுபட்ட எண்ணிக்கை 211 ஆக பதிவாகியுள்ளது.

தற்போது அம்மாநிலத்தில் 70,459 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுவரை கேரளாவில் கொரோனா தொற்றுக்கு 34,621 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 76,380 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:    

Similar News