செய்திகள்
புதிய கடற்படை தளபதியாக ஹரிகுமார் நியமனம்
கடற்படை தளபதியாக பதவி வகிக்கும் கரம்பீர் சிங் இம்மாதம் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.
புதுடெல்லி:
இந்திய கடற்படை தளபதியாக பதவி வகித்து வருபவர் கரம்பீர் சிங். கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி பொறுப்பேற்ற இவர், நவம்பர் மாதம் 30-ம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில், இந்திய கடற்படையின் புதிய தளபதியாக ஆர்.ஹரிகுமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...பீகாரில் தொடரும் சோகம் - கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி