செய்திகள்
சஞ்சய் ராவத்

பீகாரில் 40 முதல் 50 இடங்களில் போட்டியிடுவோம்: சிவ சேனா

Published On 2020-10-13 05:30 GMT   |   Update On 2020-10-13 05:30 GMT
பீகார் சட்டசபை தேர்தலில் 40 முதல் 50 இடங்களில் போட்டியிடுவோம் என்று சிவ சேனாவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் பா.ஜதனா, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் போட்டியிடுகிறது. மறுபக்கம் லாலு மகன் காங்கிரஸ் மற்றம் பல கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி என்ற பெயரில் களம் இறங்குகிறார்.

இந்நிலையில் பீகாரில் சட்டசபை தேர்தலில் நாங்கள் 40 முதல் 50 இடங்களில் போட்டியிடுவோம் என்று சிவ சேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவத் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘தற்போது வரை யாருடனும் கூட்டணி குறித்து நாங்கள் பேசவில்லை. நான் அடுத்த வாரம் பாட்னா செல்ல இருக்கிறேன். பப்பு யாதவ் உள்பட உள்ளூர் கட்சிகள் எங்களிடம் பேச விரும்புகின்றன. தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா போட்டியிடும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News