செய்திகள்
ஜே.பி. நட்டா

மம்தாவின் சூழ்ச்சியால் மத்திய அரசின் திட்டம் ஏழைகளை சென்றடையவில்லை - ஜே.பி. நட்டா புகார்

Published On 2020-09-10 12:12 GMT   |   Update On 2020-09-10 12:12 GMT
மம்தாவின் சூழ்ச்சியால் மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் திட்டம் ஏழைகளை சென்றடையவில்லை என்று ஜே.பி. நட்டா புகார் கூறியுள்ளார்.
புதுடெல்லி:

மேற்கு வங்க பாஜக நிர்வாகிகளுடன் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா காணொளியில் மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசியல் சூழ்ச்சியால் மத்திய அரசின் எந்த திட்டமும் ஏழைகளை சென்றடையவில்லை.

2019 ஆம் ஆண்டில் 40% வாக்குகள் கிடைத்ததாகவும் வரவிருக்கும் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்க்கடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை பீகார் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News