செய்திகள்
முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ர்தனா வழங்க கோரி தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம்

Published On 2020-09-08 09:35 GMT   |   Update On 2020-09-08 09:35 GMT
முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
ஐதராபாத்:

முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தெலுங்கானா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் 100வது பிறந்தநாள் கடந்த ஜூன் மாதம் கொண்டாடப்பட்டது. 
முன்னாள் பிரதமரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர்ராவ் தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு நாட்டின் கவுரமிக்க விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக தெலுங்கானா சட்டசபை மற்றும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என தெலுங்கானா சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News