செய்திகள்
அந்தமான் நிகோபார் தீவுகளின் சுற்றுலா பகுதி

நிகோபார் தீவுகளில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2020-09-06 02:50 GMT   |   Update On 2020-09-06 02:50 GMT
நிகோபார் தீவுகளில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது.
போர்ட்பிளேர்:

நிகோபார் தீவுகளில் இன்று காலை 6.38 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகாக பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
Tags:    

Similar News