செய்திகள்
கொரோனா வைரஸ்- இந்தியாவில் குணமடையும் விகிதம் 53 சதவீதத்தை நெருங்கியது
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.94 லட்சம் பேர் குணமடைந்த நிலையில், குணமடையும் விகிதம் 53 சதவீதத்தை நெருங்கி உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் இதுவரை 366946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12881 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 334 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12237 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடையும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 194325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடையும் விகிதம் 52.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 160384 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 116752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 59166 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 50193 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 27624 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 366946 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 12881 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 334 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12237 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடையும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 194325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடையும் விகிதம் 52.95 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 160384 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 116752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 59166 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் 50193 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 27624 பேர் குணமடைந்துள்ளனர்.