செய்திகள்
கொரோனா பரிசோதனை

புதிய உச்சம்- இந்தியாவில் 24 மணி நேரத்தில் 12881 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-06-18 09:39 IST   |   Update On 2020-06-18 10:58:00 IST
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.66 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 1.94 லட்சம் பேர் குணமடைந்துள்னர்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 366946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 12881 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 334 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12237 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 194325 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 160384 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 116752 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 50193 பேருக்கும், டெல்லியில் 47102 பேருக்கும், குஜராத்தில் 25093 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Similar News