செய்திகள்
துப்பாக்கி சூடு (மாதிரி படம்)

வடகிழக்கு டெல்லியில் பிரீலான்ஸ் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

Published On 2020-05-30 03:15 GMT   |   Update On 2020-05-30 03:15 GMT
டெல்லியில் சமூக ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கி வந்த பிரீலான்ஸ் பத்திரிகையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி:

வடகிழக்கு டெல்லியின் சுபாஷ் விகார் பகுதியைச் சேர்ந்தவர் ஹைதர் அலி (வயது 32). இவர் சமுக ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கும் பிரீலான்ஸ் செய்தியாளராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு 8.30 மணியளவில் ஹைதர் அலி தனியாக சென்றபோது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ஹைதர் அலி, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்துள்ளார்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News