செய்திகள்
அம்பேத்கார் பெயரை பயன்படுத்தும் மாயாவதி, அவரது கொள்கைகளை பின்பற்றவில்லை - பிரதமர் மோடி தாக்கு
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அம்பேத்கார் பெயரை பிரசாரங்களில் பயன்படுத்தும் மாயாவதி, அவரது கொள்கைகளை பின்பற்றவில்லை என கூறியுள்ளார். #Mayawati #PMModi
அயோத்தியா:
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18,23,29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,29 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பாபாசாகிப் அம்பேத்காரின் பெயரை பிரசாரங்களில் கூறுகிறார். ஆனால், அம்பேத்காரின் கொள்கைகளை ஒருபோதும் பின்பற்றவில்லை. அதற்கு மாறாக செயல்படுகிறார்.
அதேபோல் சமாஜ்வாடி கட்சியினரும் ஒவ்வொரு முறையும் சமூக போராளி லோஹியாவின் பெயரை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவரைப் போல் ஏழைகளுக்கு உதவ முன்வரவில்லை. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியினர் சட்டம்ஒழுங்கிற்கு புறம்பாக செயல்பட்டனர்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18,23,29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,29 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் அயோத்தியாவில் உள்ள அம்பேத்கார் நகருக்கு உட்பட்ட கோசைகஞ்ச் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பாபாசாகிப் அம்பேத்காரின் பெயரை பிரசாரங்களில் கூறுகிறார். ஆனால், அம்பேத்காரின் கொள்கைகளை ஒருபோதும் பின்பற்றவில்லை. அதற்கு மாறாக செயல்படுகிறார்.
அதேபோல் சமாஜ்வாடி கட்சியினரும் ஒவ்வொரு முறையும் சமூக போராளி லோஹியாவின் பெயரை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவரைப் போல் ஏழைகளுக்கு உதவ முன்வரவில்லை. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியினர் சட்டம்ஒழுங்கிற்கு புறம்பாக செயல்பட்டனர்.
இந்தியாவிற்கு அருகிலிருக்கும் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 2014ம் ஆண்டுக்கு முன், இந்தியாவில் டெல்லி, மும்பை, அயோத்தியா ஆகிய இடங்களில் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. நம் நாட்டிற்கு பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். இதற்காக தான் உங்கள் காவலாளியான நான் போராடி கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். #Mayawati #PMModi