செய்திகள்

நடிகர் பிரகாஷ் ராஜ் காங்கிரசில் சேர்ந்தாரா?

Published On 2019-04-17 14:11 GMT   |   Update On 2019-04-17 14:26 GMT
மத்திய பெங்களூரு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜ் காங்கிரசில் சேர்ந்ததாக வெளியாகும் தகவல்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். #PrakashRaj #PrakashRajfiles #ElectionCommission #BangaloreCentral #Independentcandidate
பெங்களூரு:

நடிகர் பிரகாஷ் ராஜ் மத்திய பெங்களூரு பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், அதே தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத் என்பவருடன் பிரகாஷ் ராஜ் கைகுலுக்கும் புகைப்படம் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

‘பிரகாஷ் ராஜ் காங்கிரசில் சேர்ந்து விட்டார். அவருக்கு ஓட்டுபோட்டு உங்களது வாக்குகளை வீணாக்க வேண்டாம்’ என்ற அறிவிப்புடன் வெளியான இந்த புகைப்படம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில்,  காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்-தின் நேர்முக உதவியாளரின் அரசியல் தந்திரம் மூலம் இந்த புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

முன்னர், வேட்பாளர்களுக்கு இடையிலான ஒரு விவாதமேடை நிகழ்ச்சியின்போது தன்னுடன் கலந்துகொண்ட  காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷத்துக்கு மரியாதை நிமித்தமாக நான் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தேன்.

அந்த புகைப்படத்தை வைத்து அவரது உதவியாளர் செய்துள்ள இந்த அரசியல் சித்து விளையாட்டு தொடர்பாக நான் தேர்தல் கமிஷனில் புகார் அளித்திருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #PrakashRaj #PrakashRajfiles #ElectionCommission #BangaloreCentral #Independentcandidate 
Tags:    

Similar News