செய்திகள்

குஜராத் அருகே நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்ட கடற்படையினர்

Published On 2019-04-14 23:22 GMT   |   Update On 2019-04-14 23:22 GMT
குஜராத் அருகே கடல் கொந்தளிப்புக்கு மத்தியில் கடற்படை வீரர்கள், 8 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். #CoastGuard #Fishermen
போர்பந்தர்:

குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே இந்திய மீனவர்கள் 8 பேர் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுடைய படகு திடீரென கடலில் மூழ்கியது. அதில் இருந்த 8 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். உடனடியாக அவர்கள் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய கடற்படை கப்பலை தொடர்பு கொண்டு உதவி புரியும்படி அபயக்குரல் எழுப்பினார்கள்.

இதனை தொடர்ந்து இந்திய கடற்படை கப்பல் அங்கு விரைந்து சென்று மீனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. சுற்றிலும் இருள் சூழ்ந்த நிலையிலும், கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும் கடற்படை வீரர்கள், 8 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்பு அவர்களை கடற்படை கப்பலில் ஏற்றி போர்பந்தர் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். 
Tags:    

Similar News