செய்திகள்

கர்நாடகம் - கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலி

Published On 2019-03-19 18:32 IST   |   Update On 2019-03-19 18:32:00 IST
கர்நாடகம் மாநிலத்தின் தார்வாட் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வரும் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும், இடிபாடுகளில் சிக்கிய பலரை தேடி வருகின்றனர். #DharwadBulidingCollapse
பெங்களூரு:

கர்நாடகம் மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.

கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து அங்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்றனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய பலரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.



இந்நிலையில், கட்டிட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும், இடிபாடுகளில் சிக்கிய 40க்கு மேற்பட்டோரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

தார்வாட் கட்டிட விபத்து பற்றி அறிந்த முதல் மந்திரி குமாரசாமி டுவிட்டரில் கூறுகையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன் என பதிவிட்டுள்ளார். #DharwadBulidingCollapse
Tags:    

Similar News