செய்திகள்

மோடி மீது மக்களுக்கு முழு நம்பிக்கை - பா.ஜனதா பொதுச்செயலாளர்

Published On 2019-02-26 09:05 GMT   |   Update On 2019-02-26 09:05 GMT
பிரதமர் மோடி அனைத்து கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார் என்று பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறினார். #PMModi #RamMadhav
புதுடெல்லி:

தீவிரவாதிகளுக்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது பற்றி பா.ஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ் கூறியதாவது:-

புல்வாமாவில் இந்திய வீரர்கள் பலியான சம்பவம் ஒவ்வொரு இந்தியன் மத்தியில் ஆவேசத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதன்படி இந்திய விமானப்படை தக்க பதிலடி கொடுத்துள்ளது. நமது படைகள் எப்போதும் உலகத்தரம் வாய்ந்தது என்பதை நிரூபித்துள்ளது. வீரர்களுக்கு வீர வணக்கம்.

இதில் பிரதமர் மோடி அரசியல் ரீதியாகவும் அனைத்து கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார். #PMModi #RamMadhav

Tags:    

Similar News