செய்திகள்

காஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்- நாளை விசாரணை

Published On 2019-02-21 07:12 GMT   |   Update On 2019-02-21 07:12 GMT
காஷ்மீரி மாணவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனு நாளை விசாரணைக்கு வருகிறது. #SC #Kashmiristudents #PulwamaAttack
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலைக் கண்டித்து காஷ்மீர் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.



இந்நிலையில், வழக்கறிஞர் கொலின் கான்சல்வ்ஸ் இன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நாடு முழுவதும் உள்ள காஷ்மீரி மாணவர்கள் தாக்கப்படுவதாகவும், தாக்குதலை தடுத்து நிறுத்தி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடவேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டார். ஆனால், உடனடியாக விசாரணை நடத்த நீதிபதிகள் மறுத்துவிட்டனர். நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். #SC #Kashmiristudents #PulwamaAttack
Tags:    

Similar News