செய்திகள்

போபாலில் பூட்டிய வீட்டுக்குள் ‘மம்மி’ நிலையில் கிடந்த சடலம்

Published On 2019-02-04 10:50 GMT   |   Update On 2019-02-04 10:50 GMT
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் சில மாதங்களாக பூட்டிக்கிடந்த வீட்டிற்குள், ‘மம்மி’ போன்று சடலம் மீட்கப்பட்டுள்ளது. #BhopalMummifiedBody
போபால்:

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள வித்யா நகர் பகுதியில் நேற்று அப்பார்ட்மெண்டில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் துணியால் இறுக்கமாக கட்டி ஒரு மரப்பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்ததால், அழுகி  ‘மம்மி’ போன்று மாறிவிட்டது. இந்த வீடு பல மாதங்களாக பூட்டிக் கிடந்ததாக அருகில் வசிப்பவர்கள் விசாரணையின்போது தெரிவித்தனர்.

பூட்டப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் விமலா ஸ்ரீவஸ்தவா(60) போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்தார். இவர் தனது மகன் அமித்(30) உடன் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து வீட்டை  8 மாதங்களுக்கு முன்பு ஒருவரிடம் விற்றார். ஆனால் வீடு தொடர்ந்து பூட்டிக்கிடந்ததால், கடந்த 6 மாதமாக அவரால் குடியேற முடியவில்லை. இது குறித்து தாய்-மகனை தொடர்பு கொள்ள முடியவில்லையாம். இந்நிலையில் நேற்று வீட்டை சுத்தம் செய்வதற்காக உரிமையாளர் வந்தபோது, சடலம் கிடைத்துள்ளது.

சடலத்தினை ஆய்வு செய்தபோது அது ஆறு மாதங்களாக பெட்டியில் அடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு, காயங்கள் மற்றும் அடையாளங்களை கொண்டு இறந்தது யார் என்பது உறுதி செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். #BhopalMummifiedBody 
Tags:    

Similar News