செய்திகள்

வெள்ளம், வறட்சி, புயல் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.7,214 கோடி நிவாரணம்

Published On 2019-01-29 21:17 GMT   |   Update On 2019-01-29 21:17 GMT
வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.7,214 கோடி நிவாரணம் வழங்குகிறது. #NaturalCalamity #HomeMinistry
புதுடெல்லி:

வெள்ளம், வறட்சி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதித்த 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.7,214 கோடி நிவாரணம் வழங்குகிறது.

மாநிலங்களின் கோரிக்கை குறித்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் அதிகாரக்குழு நேற்று கூடி, பரிசீலித்து கீழ்க்கண்டவாறு நிவாரண நிதி வழங்க அனுமதி அளித்தது.

* வறட்சி பாதித்த மராட்டியத்துக்கு ரூ.4,714 கோடியே 28 லட்சம், கர்நாடகத்துக்கு ரூ.949 கோடியே 49 லட்சம், ஆந்திராவுக்கு ரூ.900 கோடியே 40 லட்சம், குஜராத்துக்கு ரூ.127 கோடியே 60 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

* மழை, வெள்ளம், நிலச்சரிவால் நிலை குலைந்து போன இமாசல பிரதேசத்துக்கு ரூ.317 கோடியே 44 லட்சம் வழங்கப்படும்.

* மழை, வெள்ளத்தால் சேதங்களை சந்தித்த உத்தரபிரதேசத்துக்கு ரூ.191 கோடியே 73 லட்சம் நிதி வழங்கப்படுகிறது.

* புயலால் நிலைகுலைந்து போன புதுச்சேரிக்கு ரூ.13 கோடியே 9 லட்சம் நிவாரணம் தரப்படுகிறது.

இந்த தகவல்கள் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. #NaturalCalamity #HomeMinistry 
Tags:    

Similar News