செய்திகள்

2 பெண்களுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து அறிக்கை வேண்டும் - தேசிய மகளிர் ஆணையம்

Published On 2018-12-31 20:22 GMT   |   Update On 2018-12-31 20:22 GMT
விருதுநகர் மற்றும் சென்னை பெண்களுக்கு எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது குறித்து அறிக்கை அளிக்கும்படி தேசிய மகளிர் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. #HIVBlood #PregnantWoman #TNGovernment
புதுடெல்லி:

விருதுநகர் மாவட்டத்தில் 24 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் ரத்த வங்கி ஊழியர் அந்த ரத்தத்தை ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் முன்பு பரிசோதனை செய்யவில்லை என்றும், அந்த ரத்தம் பாதுகாப்பானது என குறிப்பு ஒட்டப்பட்டு இருந்ததால் ஆஸ்பத்திரியிலும் பரிசோதனை செய்யாமல் கர்ப்பிணிக்கு செலுத்தியதும் தெரிந்தது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதோடு அனைத்து ரத்த வங்கிகளில் உள்ள ரத்தத்தையும் ஆய்வு செய்யும்படியும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக 27 வயது பெண் புகார் கூறியுள்ளார்.

இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். இந்த 2 சம்பவங்களும் மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த பிரச்சினை குறித்து நீங்கள் விசாரணை நடத்தி, விரைவாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். #HIVBlood #PregnantWoman #TNGovernment
Tags:    

Similar News