செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்டர்- 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Published On 2018-12-29 06:49 GMT   |   Update On 2018-12-29 06:49 GMT
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #KashmirEncounter
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். அவர்களை அடக்கி ஒடுக்கும் பணியில் போலீசும், ராணுவமும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் புல்வாமா மாவட்டத்தில் ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அந்த வீட்டை ராணுவம் சுற்றி வளைத்தது.


அதை அறிந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு ராணுவமும் சுட்டது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

அதில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. #KashmirEncounter
Tags:    

Similar News