செய்திகள்

ஊழல் இல்லாத வளர்ச்சியை கர்நாடகம் விரும்புகிறது: பிரதமர் மோடி பேச்சு

Published On 2018-12-29 02:19 GMT   |   Update On 2018-12-29 02:19 GMT
பா.ஜனதா பூத்கமிட்டி நிர்வாகிகள் மத்தியில் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர், ஊழல் இல்லாத வளர்ச்சியை கர்நாடகம் விரும்புகிறது என்று பேசினார். #PMModi #BJP
பெங்களூரு :

பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதமர் மோடி, ஒவ்வொரு மாநிலமாக பா.ஜனதா பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார்.

அதே போல் கர்நாடக பா.ஜனதா சார்பில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது மோடி பேசியதாவது:-

கர்நாடகத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி அரசு சொன்னது. அது மிகவும் கொடூரமான நகைச்சுவை ஆகும். ஊழல் இல்லாத வளர்ச்சியை தான் கர்நாடகம் விரும்புகிறது. கர்நாடக மக்கள், பா.ஜனதா மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.



அதனால், மாநில அரசு மக்களின் நலன்களை புறக்கணிக்கும்போது, அதற்காக நமது கட்சி நிர்வாகிகள் குரல் கொடுக்க வேண்டியது கடமை ஆகும். கர்நாடகத்தில் ஆட்சி செய்பவர்கள், இசை நாற்காலி ஆட்டத்தை ஆடுவது போல் தெரிகிறது.

விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தால், நல்ல நிலையில் உள்ள விவசாயிகளே பயன் பெறுகிறார்கள்.

நாட்டை சுற்றிவரும் சிலர், விவசாய கடன் தள்ளுபடிக்கு நான் தான் காரணம் என்று கூறுகிறார்கள். அத்தகையவர்கள் விவசாயிகள் தற்கொலைக்கும் பொறுப்பு ஏற்பார்களா?.

இவ்வாறு மோடி பேசினார். #PMModi #BJP
Tags:    

Similar News