செய்திகள்
மோடியுடன் பூட்டான் பிரதமர் சந்திப்பு- டெல்லியில் முக்கிய பேச்சுவார்த்தை
இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பூட்டான் பிரதமர் லோதே ஷெரிங், இன்று இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #BhutanPM #PMModi
புதுடெல்லி:
பூட்டானின் புதிய பிரதமர் லோதே ஷெரிங், தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தியா மற்றும் பூடான் இடையேயான உறவின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்தியாவில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று டெல்லி வந்து சேர்ந்த அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் இன்று முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகள் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேசப்பட்டது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதன் பின்னர் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை, பூட்டான் பிரதமர் சந்தித்தார். அப்போது, அவருக்கு சுஷ்மா வாழ்த்து தெரிவித்தார். பின்னர் இருதரப்பு உறவுகளின் முக்கிய அம்சங்கள் தொடர்பாக இருவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். #BhutanPM #PMModi