செய்திகள்

5 மாநில தேர்தல் முடிவுகள்: தலைவர்கள் கருத்து

Published On 2018-12-11 21:36 GMT   |   Update On 2018-12-11 21:36 GMT
நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். #Results2018
புதுடெல்லி:

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றிய தலைவர்களின் கருத்துகள் வருமாறு:-

சந்திரபாபு நாயுடு:- மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான மாற்று அணி அமைக்க இம்முடிவுகள் வழிவகுக்கும்.

சந்திரசேகர ராவ்:- இந்த வெற்றியை தெலுங்கானா மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். தேசிய அரசியலில் நாங்கள் மிக முக்கிய பங்கு வகிக்க போகிறோம்.

மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்):- ஆட்சி மிக மிக மோசமாக இருந்ததே பா.ஜனதாவின் தோல்விக்கு காரணம். பா.ஜனதா கோட்டை என்று சொல்லப்படும் 3 மாநிலங்களிலுமே மோடிக்கு ஆதரவு குறைந்தநிலையில் அவர் இனி எங்கே ஜெயிக்கப் போகிறார்?

டி.ராஜா (இந்திய கம்யூ.):- இந்த முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு பின்னடைவை கொடுக்கும்.

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி (ஜனதாதளம்-எஸ்):- சோனியா, ராகுல் காந்தி மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. மதவாத சக்திகளை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சி தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டிய நேரம் வந்து விட்டது.

சித்தராமையா (காங்கிரஸ்):- ஆணவம் மிகுந்த பா.ஜனதாவை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதை இம்முடிவு உணர்த்துகிறது. எல்லா மதச்சார்பற்ற தலைவர் களும் ஓரணியில் திரள வேண்டும்.

உத்தவ் தாக்கரே (சிவசேனா):- தாங்கள் விரும்பாத ஆட்களை மக்கள் துணிச்சலாக நிராகரித்து உள்ளனர். அவர்களின் துணிச்சலை பாராட்டுகிறேன்.

சஞ்சய் ராவத் (சிவசேனா):- பா.ஜனதாவுக்கு தெளிவான சமிக்ஜை விடப்பட்டுள்ளது. அக்கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.

அஜித் ஜோகி (ஜனதா காங்கிரஸ்):- பா.ஜனதாவுக்கு வீழ்ச்சியை தந்துள்ள இத்தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
Tags:    

Similar News