செய்திகள்

மகாராஷ்டிராவில் வேன் மீது லாரி மோதல்: 7 பெண்கள் உள்பட 10 பேர் பலி

Published On 2018-12-09 03:08 GMT   |   Update On 2018-12-09 03:08 GMT
மகாராஷ்டிரா மாநிலம் சந்த்ராபூர் மாவட்டத்தில் நடைபெற்ற விபத்தில் 7 பெண்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். #Accident
நாக்பூர்:

மகாராஷ்டிரா மாநிலம் சந்த்ராபூர் மாவட்டத்தில் 14 பயணிகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று கோர்பனாவில் இருந்து வானி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வேன் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 7 பெண்கள், வேன் டிரைவர், 3 வயது குழந்தை மற்றும் மற்றொரு நபர் என 10 பேர் பரிதாபமாக உயரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். ஒரு வயது குழந்தை காயம் எதுவுமின்றி தப்பியது.

சம்பவத்திற்கு பின்னர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News