செய்திகள்
மேகதாதுவில் அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை - கர்நாடகா அரசு அறிவிப்பு
மேகதாதுவில் அணை கட்டும் முடிவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்று கர்நாடகா அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. #karnataka #Mekedatudam
பெங்களூரு:
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் மற்றும் மந்திரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் கர்நாடக மந்திரி சிவக்குமார் பேசியதாவது:
மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி, திட்டத்தை கர்நாடகா ஒருபோதும் கைவிடாது. நாளை முதல் அணை கட்டுவது குறித்து ஆய்வுப் பணிகள் தொடங்கப்படும்.
வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நாளை ஆய்வு மேற்கொள்கின்றனர் என்றார். #karnataka #Mekedatudam