செய்திகள்

சாதியால் கடவுளையும் பிரிப்பதா? - உ.பி. முதல்வருக்கு மந்திரி கண்டனம்

Published On 2018-12-03 06:47 GMT   |   Update On 2018-12-03 06:47 GMT
அனுமாரை தலித் என்று குறிப்பிட்ட உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில மந்திரி கடவுள்களை சாதியால் பிரிப்பது தவறு என்று குறிப்பிட்டார். #DivideGods #UPminister #YogiAdityanath
லக்னோ:

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும்கூட. இந்தியாவில் வடக்கு முதல் தெற்குவரை கிழக்கு முதல் மேற்குவரை அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்க அனுமார் பாடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.



அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த தலித் இயக்கமான ‘பீம் படை’ தலைவர் சந்திரசேகர், நாட்டில் உள்ள அனைத்து அனுமார் கோவில்களையும் இனி தலித்துகள் கைப்பற்ற வேண்டும். அந்த கோவில்களில் எல்லாம் தலித்துகளையே அர்ச்சகர்களாக பணியமர்த்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர், ‘கடவுள்களை சாதியின் பெயரால் பிரிவுப்படுத்துவது தவறு. இதனால் தற்போது அனுமார் கோவில்களை தலித் சமூகத்தினர் கைப்பற்றுவது தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது’ என்று யோகி ஆதித்யாநாத்தின் பேச்சுக்கு நேற்று கண்டனம் தெரிவித்துள்ளார். #DivideGods #UPminister #YogiAdityanath

Tags:    

Similar News