செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடியை அகற்றியபோது 2 வீரர்கள் பலி

Published On 2018-12-01 16:36 GMT   |   Update On 2018-12-01 16:36 GMT
ஜம்மு காஷ்மீரில் கண்ணி வெடியை அகற்றியபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 படைவீரர்கள் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JammuKashmir
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆக்னூர் பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு புதைத்து வைக்கப்பட்டு இருந்த கண்ணி வெடியை அகற்ற முயன்றனர். அப்போது திடீரென கண்ணி வெடி வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் 2 படைவீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #JammuKashmir
Tags:    

Similar News