செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்

Published On 2018-11-29 14:12 GMT   |   Update On 2018-11-29 14:12 GMT
ஜம்மு காஷ்மீரில் இன்று மதியம் ஒரு மணி நேரத்துக்குள் தொடர்ந்து இரு நிலநடுக்கங்கள் லேசான அளவில் ஏற்பட்டது. #Earthquake
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் இன்று மதியம் 2.30 மணியளவில் திடீரென லேசான நிலநடுக்கம் ஏற்பட்டடது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது.

அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் மதியம் 3.12 மணியளவில் மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 3.7 ரிக்டர் அளவில் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்படவில்லை என பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்குள் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டடது. #Earthquake
Tags:    

Similar News