செய்திகள்

தேர்தலுக்கான ஒற்றைத்தொகை நன்கொடை, செலவின உச்சவரம்பு ரூ.10 ஆயிரமாக குறைப்பு

Published On 2018-11-17 10:44 GMT   |   Update On 2018-11-17 10:44 GMT
தேர்தல் செலவினத்துக்காக ஒற்றைத் தொகையாக பெறப்படும் நன்கொடை மற்றும் வேட்பாளர்களின் செலவுக்கான உச்சவரம்பை ரூ.20 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக தேர்தல் கமிஷன் இன்று குறைத்துள்ளது. #ECIrevised #cashdonations
புதுடெல்லி:

அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்களுக்காக தனிநபர்கள் அளிக்கும் நன்கொடை மற்றும் வேட்பாளர்களின் செலவினங்கள் தொடர்பாக ஒற்றைத்தொகையாக (ஒருமுறை கைமாறும் தொகை) செலவிடப்படும் பணம் 20 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கும் வகையில் உச்சவரம்பு தொகையை 10 ஆயிரம் ரூபாயாக குறைத்து தேர்தல் கமிஷன் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  #ECIrevised #cashdonations 
Tags:    

Similar News