செய்திகள்

சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்

Published On 2018-11-15 15:44 GMT   |   Update On 2018-11-15 15:44 GMT
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி தனது பயணத்தை நிறைவு செய்து இன்றுஇரவு டெல்லி திரும்பினார். #PMModi
புதுடெல்லி:

ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 2 நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் சென்றடைந்தார். 

சிங்கப்பூர் விமான நிலையம் சென்ற மோடிக்கு சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைத்தொடர்ந்து, 
13-வது கிழக்காசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அந்த மாநாட்டில் பங்கேற்ற முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



பிராந்திய பொருளாதார கூட்டு ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற மோடி, சிங்கப்பூர் நிதி நிறுவனமான ஃபின்டெக் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினார்.

இந்நிலையில், இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி தனது பயணத்தை நிறைவு செய்து இன்றுஇரவு டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். #PMModi
Tags:    

Similar News