செய்திகள்

காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை - கர்நாடக அரசு அறிவிப்பு

Published On 2018-11-15 08:53 GMT   |   Update On 2018-11-15 08:56 GMT
கர்நாடகாவில் உள்ள மண்டியா மாவட்டத்தில் காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்க அம்மாநில அரசு இன்று தீர்மானித்துள்ளது. #Karnatakagovernment #Cauvery
பெங்களூரு:

கர்நாடக மாநில நீர்வளத்துறை மந்திரி சிவக்குமார் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரி சாரா ரமேஷ் ஆகியோர் தலைமையில் இரு துறைகளை சேர்ந்த உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் உள்ள விதான சவுதாவில் இன்று நடைபெற்றது.



மண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணையை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்படும். அந்த அருங்காட்சியகத்தின் உச்சியில் காவிரி தாய்க்கு  125 அடி உயரத்தில் சிலை அமைக்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அப்பகுதியில் புதிய ஏரி உருவாக்கப்பட்டு இந்த சிலையும், அருகாமையில் 360 அடியில் கண்ணாடியால் ஆன இரு கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பங்களிப்புடன் சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இந்த திட்டத்துக்கு தேவையான நிலம் மட்டும் அரசு ஒதுக்கீடு செய்யும் என மந்திரி சிவக்குமார் நிருபர்களிடம் தெரிவித்தார். #Karnatakagovernment #Cauvery 
Tags:    

Similar News