செய்திகள்

சபரிமலை கோவில் விவகாரம் - தேவசம் போர்டு முடிவில் மீண்டும் மாற்றம்

Published On 2018-11-09 09:16 GMT   |   Update On 2018-11-09 09:16 GMT
சபரிமலை கோவில் விவகாரத்தில் தேவசம் போர்டின் நிலையற்ற தன்மைக்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #SabarimalaTemple #DevaswomBoard
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகிற 13-ந் தேதி நடைபெற உள்ளது. சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு முதலில் தாங்களும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்று அறிவித்தது. அதன் பிறகு அது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது.

பிறகு தாங்கள் மறு சீராய்வு மனுதாக்கல் செய்யாவிட்டாலும் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுக்களுடன் தேவசம் போர்டையும் இணைத்துக் கொள்வோம் என்று அறிவித்தது.

இந்த நிலையில் தற்போது சபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தேவசம் போர்டு சார்பாக ஆஜராகி வரும் வக்கீல் அபிஷேக் சிங்வியை தேவசம் போர்டு மாற்றி உள்ளது. அவருக்கு பதில் இனி புதிய வக்கீல் இந்த வழக்கில் ஆஜராவார் என்று கூறப்பட்டுள்ளது.

தேவசம் போர்டின் இந்த நிலையற்ற தன்மைக்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். #SabarimalaTemple #DevaswomBoard

Tags:    

Similar News