செய்திகள்

அரியானாவில் கார், ஜீப் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலி

Published On 2018-11-04 14:33 GMT   |   Update On 2018-11-04 14:33 GMT
அரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் இன்று வேகமாக வந்த லாரி கார் மற்றும் ஜீப்பின் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். #12killed #truckramscar #truckramsjeep #Sonipat
சண்டிகர்:

அரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா-பானிபட் நெடுஞ்சாலை வழியாக இன்று மாலை சுமார் 6 மணியளவில் வேகமாக வந்த ஒரு லாரி முட்லானா கிராமத்தின் அருகே ஒரு கார் மற்றும் ஜீப்பின்மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். #12killed #truckramscar #truckramsjeep #Sonipat
Tags:    

Similar News