செய்திகள்

என்டி ராமராவ் பெயர்- படத்தை பயன்படுத்தக்கூடாது: சந்திரபாபு நாயுடுவுக்கு லட்சுமி பார்வதி எதிர்ப்பு

Published On 2018-11-04 08:28 GMT   |   Update On 2018-11-04 08:28 GMT
காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் என்.டி.ராமராவ் பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தக்கூடாது என்று சந்திரபாபு நாயுடுவுக்கு லட்சுமி பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #ChandraBabuNaidu #NTRamarao
நகரி:

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் சந்திரபாபுநாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சியை தோற்றுவித்த என்.டி.ராமராவின் மனைவி லட்சுமி பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ஐதராபாத்தில் உள்ள என்.டி.ராமராவ் சமாதி முன் மவுனதீட்சை மேற்கொண்டார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, ஆந்திர மக்களின் தன்மானத்தை டெல்லியில் அடகு வைப்பதை தடுக்க மறைந்த முதல்வரும் எனது கணவருமான என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கினார்.

அவர் உயிரோடு இருந்த வரை காங்கிரஸ் கட்சியை கடுமையாக எதிர்த்து வந்தார். அப்படிப்பட்ட தெலுங்கு தேசம் கட்சியையும் முதல்வர் பதவியையும் பறித்துக் கொண்டு என் கணவரின் மரணத்திற்கும் சந்திரபாபு நாயுடு காரணமானார். தற்போது என்.டி.ஆர். எதிர்க்கட்சியாக பார்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததை அவர் ஆத்மா மன்னிக்காது.

சந்திரபாபு நாயுடு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக்கொள்ளட்டும். ஆனால் என் கணவர் கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்த பிறகு தேர்தல் பிரசாரத்தின் போது என்.டி.ராமராவின் பெயரையோ படத்தையோ சந்திரபாபு நாயுடு உபயோகிக்கக்கூடாது. இதற்காக நீதி கேட்டு நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் லட்சுமி பார்வதி தெரிவித்தார். #ChandraBabuNaidu #NTRamarao
Tags:    

Similar News