செய்திகள்

ஜப்பான் வரும் பிரதமர் மோடிக்கு தனது பங்களாவில் விருந்து அளிக்கிறார் பிரதமர் ஷின்சோ அபே

Published On 2018-10-25 20:22 GMT   |   Update On 2018-10-27 08:54 GMT
இருநாள் பயணமாக ஜப்பான் செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தனது பங்களாவில் விருந்து அளிக்கிறார் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே. #Modi #ShinzoAbe
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வரும் 28 மற்று ம் 29ம் தேதிகளில் ஜப்பான் செல்ல உள்ளார்.

இரண்டு நாள் அரசு முறை பயணமாக செல்லும் பிரதமர் மோடிக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது பங்களாவில் விருந்தளிக்க உள்ளார்.

முதல் நாளான 28-ம் தேதி பிரதமர் மோடி யாமனாஷி நகருக்கு செல்கிறார். அங்கு இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 



மறுநாள் 29-ம் தேதி டோக்கியோவில் நடக்கும் சந்திப்பில் இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியும், பிரதமர் ஷின்சோ அபேவும் விவாதிக்க உள்ளனர். அங்குள்ள 'ரோபோ' தயாரிப்பு மையத்துக்கு சென்று, மோடி பார்வையிடுகிறார்.

மேலும், ஜப்பான் செல்லும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அபேயின் தனிப்பட்ட சொகுசு பங்களாவில் விருந்தளிக்க உள்ளார்.

ஷின்சோ அபே தனது சொகுசு பங்களாவுக்கு வரும்படி வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு அழைப்பு விடுப்பதும், விருந்து அளிப்பதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #Modi #ShinzoAbe
Tags:    

Similar News