செய்திகள்

சிபிஐ இயக்குனராக நாகேஷ்வரராவ் நியமனத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு

Published On 2018-10-24 09:26 GMT   |   Update On 2018-10-24 09:26 GMT
சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பிரபல மூத்த வக்கீல் பிரசாந்த் பூ‌ஷண் மனுதாக்கல் செய்துள்ளார். #CBI #NageswaraRao #AlokVerma
புதுடெல்லி:

சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

பிரபல மூத்த வக்கீல் பிரசாந்த் பூ‌ஷண் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

அதில் அவர், “சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் விதியை மீறி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதை கவனத்தில் கொள்ளாமல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். #CBI #NageswaraRao #AlokVerma
Tags:    

Similar News