செய்திகள்
காவலர் வீர வணக்க நாளில் காவலர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை
டெல்லியில் மறைந்த காவலர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் காவலர் வீர வணக்க நாளில் பிரதமர் மோடி காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். #NationalPoliceDay #PMModi
புதுடெல்லி:
1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன படையினரால் கொல்லப்பட்ட காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதேபோல், தமிழகத்தில் சென்னை மற்றும் புதுச்சேரியிலும் காவலர் நினைவுநாள் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். 21 குண்டுகள் முழங்க நடைபெற்ற இந்த காவலர் நினைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோர் பங்கேற்றனர். #NationalPoliceDay #PMModi
1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன படையினரால் கொல்லப்பட்ட காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதனையொட்டி, டெல்லியில் பிரதமர் மோடி மறைந்த காவலர்களுக்கான நினைவு இடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜகவின் மூத்த தலைவரான அத்வானி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
இதேபோல், தமிழகத்தில் சென்னை மற்றும் புதுச்சேரியிலும் காவலர் நினைவுநாள் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். 21 குண்டுகள் முழங்க நடைபெற்ற இந்த காவலர் நினைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோர் பங்கேற்றனர். #NationalPoliceDay #PMModi