செய்திகள்

பாலியல் புகார்களுக்கு என விசாரணை குழுவை அமைக்க அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம்

Published On 2018-10-18 11:13 GMT   |   Update On 2018-10-18 11:13 GMT
பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணை குழுவை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார். #ManekaGandhi #metoo
புதுடெல்லி:

மீடூ பிரசாரம் மூலம் பெண்கள் பணியிடங்களில் சந்தித்த பாலியல் தொல்லைகள் வெளியாகி வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். 

இப்போது பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணை குழுவை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார். 

“அரசியல் கட்சிகள் உள் விசாரணை குழுவை அமைக்க கோரி அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இங்கு 6 தேசிய கட்சிகள், 90 சிறிய கட்சிகள் உள்ளது. அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என கூறியுள்ளார்.  #ManekaGandhi #metoo
Tags:    

Similar News