செய்திகள்

ரெயில்களில் சிறப்பு உணவு அறிமுகம் - நவராத்திரியை கொண்டாடும் ஐஆர்சிடிசி

Published On 2018-10-10 14:36 GMT   |   Update On 2018-10-10 14:36 GMT
நவராத்திரி பண்டிகை தொடங்கியுள்ளதை முன்னிட்டு ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் ரெயில்வே பயணிகளுக்கு சிறப்பு உணவை அறிமுகம் செய்துள்ளது. #IRCTC #Navaratri
மும்பை:

இந்திய பண்டிகைகளில் நவராத்திரி மிகவும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக, வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

இதுபோன்ற பண்டிகை காலங்களில் ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகளை கவரும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. சிறப்பு உணவுகளை வழங்கி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் சிறப்பு உணவை, விராட் கா கானா என்ற பெயரில் ஐ.ஆர்.சி.டி.சி. வழங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



நவராத்திரி கொண்டாடப்படும் இந்த 9 நாட்களிலும் இந்த சிறப்பு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், இந்த சிறப்பு உணவு நாக்பூர், அம்பாலா, ஜெய்ப்பூர், இடார்சி, ஜான்சி, நாசிக், ரத்லம், மதுரா, நிஜாமுதீன் மற்றும் லக்னோ ஆகிய ரெயில் நிலையங்களில் கிடைக்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #IRCTC #Navaratri
Tags:    

Similar News