செய்திகள்

வழிமுறைகள் உருவாக்கப்பட்ட பின் அவசர வழக்குகள் விசாரணை - தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்

Published On 2018-10-03 16:55 GMT   |   Update On 2018-10-03 16:55 GMT
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட ரஞ்சன் கோகாய், அவசர வழக்குகள் விசாரிக்கும் முன் வழிமுறைகள், தகுதிகள் ஆகியவற்றை வகுக்க வேண்டும் என கூறியுள்ளார். #CJIRanjanGogoi
புதுடெல்லி:

சுப்ரீம் கோட்டின் 46-வது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

நீதிபதி ரஞ்சன் கோகாயிடம், வழக்கறிஞர்கள் அவசர வழக்காகச் சிலவற்றை விசாரிக்கக் கோரி முறையிட்டனர். அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், இப்போது ஏதும் முறையிடாதீர்கள். நாம் குறிப்பிட்ட வழிமுறைகளையும், தகுதிகளையும் வகுத்துவிட்டு, எவ்வாறு, எந்த வகையில் முறையிடலாம் என்பதை முடிவு செய்யலாம்.

யாராவது ஒருவர் நாளைத் தூக்கிலிடப்போகிறார்கள் என்றால் அதை அவசர வழக்காக விசாரிக்கலாம் அல்லது நாளை யாரையாவது வெளியேற்ற வேண்டும் என்றால் விசாரிக்கலாம். ஆதலால், அவசர வழக்கு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவகையில் அவசர வழக்காக எதையும் முறையிட வேண்டாம் என்று தெரிவித்தார்.

மேலும், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திலும் ரஞ்சன் கோகாய் மரியாதை செலுத்தினார். தலைமை நீதிபதியாக பொறுப்பில் இருக்கும் ஒருவர் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
Tags:    

Similar News