செய்திகள்

விவசாயிகள் பேரணி தடுத்து நிறுத்தம்- கண்ணீர் புகை குண்டு வீச்சு- உபி - டெல்லி எல்லையில் பதற்றம்

Published On 2018-10-02 06:10 GMT   |   Update On 2018-10-02 06:10 GMT
வடமாநில விவசாயிகள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி நோக்கி பேரணி நடத்தி வருகிறார்கள். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. #KisanKrantiPadyatra
உபி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்பட வடமாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று கிஷான் கிராந்தி பாத யாத்திரிகை என்ற பெயரில் உத்தர பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி ஒட்டுமொத்தமாக பேரணி சென்றார்கள்.



அப்போது உபி - டெல்லி எல்லையில் அதிரப்படையினர் விவசாயிகளை டெல்லிக்குள் புகாத வண்ணம் தடுப்பு வேலி அமைத்து தடுத்தனர். அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. விவசாயிகள் கலைந்து செல்வதற்காக  போலீாசர் தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டும் வீசினார்.

இதனால் அப்பகுதி போர்க்களமாக மாறியுள்ளது.
Tags:    

Similar News