செய்திகள்

பீகாரில் வன்முறையாக மாறிய மாணவர் போராட்டம் - அரசு பேருந்துக்கு தீவைப்பு

Published On 2018-09-29 16:34 IST   |   Update On 2018-09-29 16:34:00 IST
பீகார் மாநிலத்தில் இயங்கிவரும் மகத் பல்கலைக்கழகம் 32 கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். #Bihar #StudentsProtest
பாட்னா:

பீகார் மாநிலம் புத்தகயா பகுதியில் இயங்கிவரும் மகத் பல்கலைக்கழகத்தின் இணைப்பில் இல்லாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை வெளியிட பீகார் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், தற்போது அக்டோபர் 1 முதல் துவங்க இருக்கும் தேர்விலும் இணைப்பில் இல்லாத கல்லூரிகள் பங்கு பெற மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சுமார் 86 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் மறுஆய்வு செய்யுமாறு மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், மகத் பல்கலைக்கழகத்தினால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 32 கல்லூரிகளின் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது, பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், அரசுக்கும் கண்டனம் தெரிவித்த கல்லூரி மாணவர்கள் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது பீகார் அரசு பேருந்து தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியின் பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.

மாணவர்கள் தங்கள் வாழ்வின் முக்கிய பகுதியான தேர்வுக்காக போராடும் நிலையில், வன்முறையை கையில் எடுத்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. #Bihar #StudentsProtest
Tags:    

Similar News