செய்திகள்

போன ஜென்மத்து சகோதரி என கூறி இளம்பெண்ணை கடத்த முயன்ற பெண் கைது

Published On 2018-09-12 11:38 GMT   |   Update On 2018-09-12 11:38 GMT
போன ஜென்மத்தில் சகோதரிகளாக இருந்தோம் எனக்கூறி இளம்பெண்ணை கடத்த முயன்ற பெண் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிளை மத்தியப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
போபால்:

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த ஷிவானி என்ற பெண், தனது தாய் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையில் சில வாரங்கள் இருந்துள்ளார். அப்போது, 40 வயதான கிரண் என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். இருவருக்கும் இடையே நட்பு மலரவே போன் நம்பர்களை பறிமாற்றம் செய்து பேசும் அளவுக்கு இருந்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூர் வந்த கிரண் போன ஜென்மத்தில் நாம் இருவரும் சகோதரியாக இருந்தோம் எனக்கூறி ஷிவானியை வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். இதனை அடுத்து, ஷிவானி குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர்.

புகாரின் அடிப்படையில் கிரண் மற்றும் அவருடன் வந்த பைகுலா போலீஸ் நிலைய காவலர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News