செய்திகள்
கனமழையால் 26 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்ட இடுக்கி அணையில் நீர் திறப்பு நிறுத்தம்
கேரளாவில் கனமழை காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் திறக்கப்பட்ட இடுக்கி அணையில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து நீர் திறக்கப்படுவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. #IdukkiDam
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மிகப்பெரிய சேதங்களை சந்தித்த கேரளாவில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.
2403 அடி உயரமான இடுக்கி அணைக்கு அதிகளவு நீர் வந்ததன் காரணமாக 26 ஆண்டுகளுக்கு பின் கடந்த மாதம் 9-ம் தேதி அணை திறக்கப்பட்டது.
தற்போது, மழை இல்லாததால் நீர் வரத்தும் குறைந்தது. அணையில் 2391 அடி தண்ணீர் இப்போது உள்ளது. இதன் காரணமாக நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.