செய்திகள்

உ.பி. மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழைக்கு 16 பேர் உயிரிழப்பு

Published On 2018-09-02 09:58 GMT   |   Update On 2018-09-02 09:58 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் பெய்துவரும் கனமழைக்கு நேற்று ஒரேநாளில் 16 பேர் உயிரிழந்தனர். #UPrains
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மழைசார்ந்த விபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.

குறிப்பாக, மழை, வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் 6 பேரும், சிட்டாபூர் மாவட்டத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். அவுரைய்யா மற்றும் அமேதி மாவட்டங்களில் தலா இருவரும், லக்கிம்புரி கிரி, ரேபரேலி மற்றும் உன்னாவ் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர் என அம்மாநில மீட்புப்பணி ஆணையாளர் இன்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசின் சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவிக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். #16die #UPrains
Tags:    

Similar News