செய்திகள்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பரிந்துரை

Published On 2018-09-01 11:46 GMT   |   Update On 2018-09-01 11:46 GMT
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்துள்ளார். #CJI
புதுடெல்லி :

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அக்டோபர் 2-ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால், அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்கும் பணிகள் தொடங்யுள்ளன.

தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரை புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு குடியரசு தலைவரிடம் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று பரிந்துரை செய்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கும் விதமாக உள்ளது என பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய 4 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. #CJI
Tags:    

Similar News