செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதி யார்? தீபக் மிஸ்ராவுக்கு மத்திய மந்திரி கடிதம்

Published On 2018-08-28 14:15 GMT   |   Update On 2018-08-28 14:15 GMT
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரைக்கக் கோரி சட்ட மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார். #SC #CJI #DipakMisra
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அவருக்கு அடுத்ததாக தலைமை நீதிபதியாக நியமிக்க உள்ளவரை பரிந்துரைக்க வேண்டும் என தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்ட மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் கடிதம் எழுதியுள்ளார்.

தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த நிலையில் நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை அடுக்கி ஊடகங்களை சந்தித்த நீதிபதிகளில் கோகோயும் ஒருவர். இதனால், அவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதில் எதேனும் சர்ச்சை நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், மூத்த நீதிபதிகளுடன் தலைமை நீதிபதி கலந்து ஆலோசித்த பின்னரே அடுத்த தலைமை நீதிபதிக்கான பெயரை பரிந்துரைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 
Tags:    

Similar News